வந்து பிறந்தானோ ???
வெறும் வருடம் நாம் கணக்கிடவே
வந்து பிறந்தானோ ???
வெறும் நாட்காட்டி நாம் கிழித்திடவே
வந்து பிறந்தானோ ???
நமக்காய் வருந்தி தன்னுயிர் விட்டிடவே
இல்லையென்று என்றும் சொன்னோம்
இருப்பதில்லை அவன் சொன்னதுபோல்
தன்னுயிர் போலே இன்னுயிர் எல்லாம்
கருதிடுவோம், காத்திடாமல் போனாலும்
கருகிடும் உயிர் கண்டும் கண்மூடி
கடக்கும் காட்டுமிராண்டி ஆகாமல்
மண்ணுயிர் எல்லாம் தன்னுயிர் போல்
மனிதம் மலர்ந்து மகிழ்ச்சி பிறக்க
பிறந்து வந்தான் பிள்ளையென
அவன் பிள்ளை தம் கைகளிலே ...
புதன், 24 டிசம்பர், 2008
செவ்வாய், 23 டிசம்பர், 2008
உன்னை பிரிந்த நேரம்
உன்னை பிரிந்து வந்தபின்னே
கடந்த நாட்கள் ஒன்றும் அதிகமில்லை
ஒவ்வொரு நாளும் ஒரு யுக நீளம்
மணி நேரம் அதிகமில்லை
காலம் நேரம் கடப்பதில்லை
கடிகாரமும் சுழல்வதில்லை
நிமிடம் கூட நீளமல்ல
நடக்கும் சக்தியற்று நட்டமாய் நிற்குதடி
நொடிக்கும் நேரம் தான் மறந்து
துடிக்கும் நொடி முள்ளும்
தொண்டை வரை குத்துதடி
குருதி தினம் குடிக்குதடி
கடந்த நாட்கள் ஒன்றும் அதிகமில்லை
ஒவ்வொரு நாளும் ஒரு யுக நீளம்
மணி நேரம் அதிகமில்லை
காலம் நேரம் கடப்பதில்லை
கடிகாரமும் சுழல்வதில்லை
நிமிடம் கூட நீளமல்ல
நடக்கும் சக்தியற்று நட்டமாய் நிற்குதடி
நொடிக்கும் நேரம் தான் மறந்து
துடிக்கும் நொடி முள்ளும்
தொண்டை வரை குத்துதடி
குருதி தினம் குடிக்குதடி
நினைவு
உடல் விட்டு வந்தாலும்
உயிர் விட்டு வரவில்லை
உனை விட்டு வந்தேன் என்றோ
நினை என்றே நித்தமும்
நிமிடமும் எனை வதைத்தாய்
நிழலின்றி இருந்தாலும் நின்
நினைவின்றி இருப்பதில்லை
நிம்மதி கொடுக்கும் தேவதை நீ
நித்தம் நான் தேடும் தேவையும் நீ
துடிக்க செய்வதும் துளிர்க்க செய்வதும்
உன் நினைவு, உயிர் பெற்றேன் உனக்காக
உத்தரவு தருவாயா எனதுயிரே
உயிரோடு உயிர் வாழ !!!
உயிர் விட்டு வரவில்லை
உனை விட்டு வந்தேன் என்றோ
நினை என்றே நித்தமும்
நிமிடமும் எனை வதைத்தாய்
நிழலின்றி இருந்தாலும் நின்
நினைவின்றி இருப்பதில்லை
நிம்மதி கொடுக்கும் தேவதை நீ
நித்தம் நான் தேடும் தேவையும் நீ
துடிக்க செய்வதும் துளிர்க்க செய்வதும்
உன் நினைவு, உயிர் பெற்றேன் உனக்காக
உத்தரவு தருவாயா எனதுயிரே
உயிரோடு உயிர் வாழ !!!
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
எண்ணம்
எண்ணத்தை தான் அடக்க
என்னத்தை நான் அடக்க
என்னதான் அடக்கினாலும்
எண்ணம்தான் அடங்கிடுமோ
எண்ணம் தான் அடங்கி விட்டால்
இயக்கம் தான் இருந்திடுமோ
இயக்கம் இல்லையென்றால்
ஏற்றம் தான் வந்திடுமோ
ஏற்றம் தான் பெற்றிடவே
சிறந்த எண்ணம் போற்றிடுவோம்
என்னத்தை நான் அடக்க
என்னதான் அடக்கினாலும்
எண்ணம்தான் அடங்கிடுமோ
எண்ணம் தான் அடங்கி விட்டால்
இயக்கம் தான் இருந்திடுமோ
இயக்கம் இல்லையென்றால்
ஏற்றம் தான் வந்திடுமோ
ஏற்றம் தான் பெற்றிடவே
சிறந்த எண்ணம் போற்றிடுவோம்
கற்பனைக்கரு
கற்பனையின் கருவாய் நீயானால்
கவிதையின் உருவாய் காதல் பிறக்கும்
கருவாய் உருவாய் பிறந்த காதல்
பிள்ளையாய் நம்மை பெற்றெடுக்கும்
பிறந்த பிள்ளை என்றில்லாமல்
பேயாட்டம் நம்மை ஆட்டிவைக்கும்
ஆட்டியே வைத்தாலும் ஆயுள் வரை
அன்பால் அடக்கி வைக்கும்
அடக்கியே வைத்தாலும் அன்றாடம்
ஆசைகொண்டு அணைக்க வைக்கும்
அணைக்க வைத்தே ஆடை அபகரிக்கும்
ஆடை இழந்தாலும் அழகு பார்க்கும்
அழகு பார்த்தே நம்மை அடிமை ஆக்கும்
அடிமை ஆக்கி நம்மை அரசாலும்
அரசாண்டாலும் நம் சேவகம் செய்யும்
சேவகம் செய்தே நம்மை சேவிக்க செய்யும்
சேவிக்க செய்தே நம் ஜீவன் சிறக்க செய்யும்
ஜீவன் சிறக்க செய்யதே ஜென்மம் தரும்
ஜென்மம் தந்தே நம்மை சேர்த்து வைக்கும்
சேர்த்து வைத்தே ஆயுள் துன்பம் தரும்
இத்துன்பம் தந்தே நம் இன்பம் பெருக்கும் ...
கவிதையின் உருவாய் காதல் பிறக்கும்
கருவாய் உருவாய் பிறந்த காதல்
பிள்ளையாய் நம்மை பெற்றெடுக்கும்
பிறந்த பிள்ளை என்றில்லாமல்
பேயாட்டம் நம்மை ஆட்டிவைக்கும்
ஆட்டியே வைத்தாலும் ஆயுள் வரை
அன்பால் அடக்கி வைக்கும்
அடக்கியே வைத்தாலும் அன்றாடம்
ஆசைகொண்டு அணைக்க வைக்கும்
அணைக்க வைத்தே ஆடை அபகரிக்கும்
ஆடை இழந்தாலும் அழகு பார்க்கும்
அழகு பார்த்தே நம்மை அடிமை ஆக்கும்
அடிமை ஆக்கி நம்மை அரசாலும்
அரசாண்டாலும் நம் சேவகம் செய்யும்
சேவகம் செய்தே நம்மை சேவிக்க செய்யும்
சேவிக்க செய்தே நம் ஜீவன் சிறக்க செய்யும்
ஜீவன் சிறக்க செய்யதே ஜென்மம் தரும்
ஜென்மம் தந்தே நம்மை சேர்த்து வைக்கும்
சேர்த்து வைத்தே ஆயுள் துன்பம் தரும்
இத்துன்பம் தந்தே நம் இன்பம் பெருக்கும் ...
உயிரும் உணர்வும்
குளம் எழும் அலை எண்ணம்
அலை எழும் குளம் உணர்வு
அலையும் எண்ணம் அடங்கிப்போகும்
உணர்வு என்றும் ஒடுங்காது
உணர்வும் உயிரும் வெவ்வேறோ
எண்ணம் ஒன்று எழும்பி ஓட
உயிரும் உணர்வும் வேறென்றால்
நீயும் நானும் வேறு அன்றோ
உயிராய் உணர்வாய் விலகி நின்றேன்
உயிராய் என்னை உணரவில்லை
உணர்வாய் நானும் உயிர்க்கவில்லை
உயிரும் உணர்வும் ஒன்றாகி
உணர்ந்து கொண்டேன் ஒன்றென்றே
உயிரும் உணர்வும் அதுபோல
உன்னில் நானும்
என்னில் நீயும் ஒன்றானோம்
அடங்கும் அலை தான் போல
நம்மில் நாம் அடங்கி என்றும்
ஒடுங்கா உணர்வு குளம் ஆனோம்.
அலை எழும் குளம் உணர்வு
அலையும் எண்ணம் அடங்கிப்போகும்
உணர்வு என்றும் ஒடுங்காது
உணர்வும் உயிரும் வெவ்வேறோ
எண்ணம் ஒன்று எழும்பி ஓட
உயிரும் உணர்வும் வேறென்றால்
நீயும் நானும் வேறு அன்றோ
உயிராய் உணர்வாய் விலகி நின்றேன்
உயிராய் என்னை உணரவில்லை
உணர்வாய் நானும் உயிர்க்கவில்லை
உயிரும் உணர்வும் ஒன்றாகி
உணர்ந்து கொண்டேன் ஒன்றென்றே
உயிரும் உணர்வும் அதுபோல
உன்னில் நானும்
என்னில் நீயும் ஒன்றானோம்
அடங்கும் அலை தான் போல
நம்மில் நாம் அடங்கி என்றும்
ஒடுங்கா உணர்வு குளம் ஆனோம்.
வெள்ளி, 19 டிசம்பர், 2008
எண்ணமாகிய பேய்
என்ன என்ன நான் பேச
எதை எண்ணி தான் பேச
எதுவும் எழுத்தும் நீயாக
ஏனோ என்னை பேயாக
ஆட்டி நீயும் வைக்கின்றாய்
ஆடி ஆடி அலைகின்றேன்
ஆசை ஏனோ விடவில்லை
அன்பே உன்னை தொட்டிடவே
அங்கும் எங்கும் தொடர்ந்திடுவேன்
காட்டி நானும் கொண்டிடவே
கைகள் நீட்டி வருகின்றேன்
கையில் நீயும் வந்துவிடு
காதல் , காலம் தருகின்றேன்
எதை எண்ணி தான் பேச
எதுவும் எழுத்தும் நீயாக
ஏனோ என்னை பேயாக
ஆட்டி நீயும் வைக்கின்றாய்
ஆடி ஆடி அலைகின்றேன்
ஆசை ஏனோ விடவில்லை
அன்பே உன்னை தொட்டிடவே
அங்கும் எங்கும் தொடர்ந்திடுவேன்
காட்டி நானும் கொண்டிடவே
கைகள் நீட்டி வருகின்றேன்
கையில் நீயும் வந்துவிடு
காதல் , காலம் தருகின்றேன்
எண்ணத்தில்
என்னிலும், எண்ணத்திலும்
நீயே நின்று என்றும் நீங்காதிருப்பதால்
எண்ணம் அது வண்ணமிகு
வஞ்சி மகள் தங்க தமிழை
தாவி பிடித்து வாரி அணைத்தால்
வந்து விழும் வார்த்தையெல்லாமே
வர்ண ஜாலம் காட்டும்மடி என் கண்ணே
கண் காண காட்சி இல்லை
காணாத ஒளி இன்றி
கல்லில் சிலை பிறப்பதில்லை
கை கொள்ளும் உளி இன்றி
எந்தன் எண்ணம் ஒளிர்ந்ததில்லை
என்னில் நீயின்றி
எண்ணம் நீயாய் இரு
எழுத்தும் நீயாய் இரு
நானும் நீயாய் ஆனால்
நான் அடைவேன் சொர்க்கத்தையே...
நீயே நின்று என்றும் நீங்காதிருப்பதால்
எண்ணம் அது வண்ணமிகு
வஞ்சி மகள் தங்க தமிழை
தாவி பிடித்து வாரி அணைத்தால்
வந்து விழும் வார்த்தையெல்லாமே
வர்ண ஜாலம் காட்டும்மடி என் கண்ணே
கண் காண காட்சி இல்லை
காணாத ஒளி இன்றி
கல்லில் சிலை பிறப்பதில்லை
கை கொள்ளும் உளி இன்றி
எந்தன் எண்ணம் ஒளிர்ந்ததில்லை
என்னில் நீயின்றி
எண்ணம் நீயாய் இரு
எழுத்தும் நீயாய் இரு
நானும் நீயாய் ஆனால்
நான் அடைவேன் சொர்க்கத்தையே...
உனை பிரிந்த நேரத்தில்
உனை பிரிந்த நேரத்தில்
நொடியும் கூட நொண்டியடித்து நிற்கும்
நிமிடம் அது நின்ற இடத்தில்
நீட்டி நிமிர்ந்து படுக்கும்
மணி காட்டும் குட்டை முள்ளோ
கூனி குறுகி கரைந்து போகும்
காலம் அது காலன் போல
உயிர் பிடுங்கி உடல் தின்னும்
உடன் வருவாய் காலங்கள் கடந்து செல்ல...
நொடியும் கூட நொண்டியடித்து நிற்கும்
நிமிடம் அது நின்ற இடத்தில்
நீட்டி நிமிர்ந்து படுக்கும்
மணி காட்டும் குட்டை முள்ளோ
கூனி குறுகி கரைந்து போகும்
காலம் அது காலன் போல
உயிர் பிடுங்கி உடல் தின்னும்
உடன் வருவாய் காலங்கள் கடந்து செல்ல...
புதன், 10 டிசம்பர், 2008
ஏக்கம்
ஏங்கித்தான் எனை அழைத்தாயோ
ஏங்கத்தான் எனை அழைத்தாயோ
நெஞ்சம் எல்லாம் நீயாக
மஞ்சம் கூட தீயாக
இனித்து நீ நினைத்தாயோ
நினைத்தே நீ இனித்தாயோ
உள்ளம் அது நீயாகி
உன் நினைவால் தீயாகி
உயிரை வருத்துதடி, உயிரே
ஏங்கத்தான் எனை அழைத்தாயோ
நெஞ்சம் எல்லாம் நீயாக
மஞ்சம் கூட தீயாக
இனித்து நீ நினைத்தாயோ
நினைத்தே நீ இனித்தாயோ
உள்ளம் அது நீயாகி
உன் நினைவால் தீயாகி
உயிரை வருத்துதடி, உயிரே
வெள்ளி, 7 நவம்பர், 2008
புரியாத புன்னகை

சூம்பிய கால்களும்
ஏங்கிய கண்களும்
வலுவில்லா தேகத்தை
பளு தூக்கும் வலி கொண்டு
வயிற்றின் வலி போக்க
வாழ்வின் வழி தேட
கட்டைப்பலகை மேல் கை கொண்டு
வழியெங்கும் வந்து போகையிலும்
புரியாத புன்னகை !
புரிகின்றானோ ஆண்டவன் ???
இறைந்திருக்கும் குப்பையில்
கடந்தவர் கருணையும், கண்ணீரும்
கலந்திருக்கும் காரணத்தினாலோ ???
கடந்தவர் எல்லாம்
கல் நெஞ்சரும் இல்லை
காசிட்டவர் எல்லாம்
கருணை நிறைந்தவரும் இல்லை
என்னும் கர்மம் அறிந்ததாலோ???
கடவுளுக்கும் காரணக்காரனுக்குமே வெளிச்சம்...
நம் காதல்
வலம் வைத்து வாழ்வில் வந்தாய்
வளம் நாளும் தந்திடவே
வசந்தம் நம் வழித்துணையாய்
வாழ்வெல்லாம் வரும் உடனே
தீராத தேன்அமுதாய் நீயிருப்பாய்
திகட்டாத தீஞ்சுவையில் நாளும்,
உன்னில் நான் புதைந்து
என்னில் நீ எழுவாய்
மகிழும் மனம் கொண்டே
கமழும் நம் காதல் தினம் தினம்...
வளம் நாளும் தந்திடவே
வசந்தம் நம் வழித்துணையாய்
வாழ்வெல்லாம் வரும் உடனே
தீராத தேன்அமுதாய் நீயிருப்பாய்
திகட்டாத தீஞ்சுவையில் நாளும்,
உன்னில் நான் புதைந்து
என்னில் நீ எழுவாய்
மகிழும் மனம் கொண்டே
கமழும் நம் காதல் தினம் தினம்...
உருகும் உயிர்
உடலால் உன்னை விட்டு
உணர்வால் எனை விட்டு
எண்ணம் அது எரியும் நெருப்பாய்
எலும்பு இல்லா எனதுயிரை
ஏனோ சுட்டு வதைக்குதடி
உருகும் உயிர் குளிர
உன் உஷ்ண உடல் கொண்டு
அணைப்பாய் என் ஆயுள் வரை
Casino means Cash No
Casino means Cash No
காசு வேண்டாமென்றாலும்
வேண்டுமென்றாலும் ஏமாந்து போக
வேலை வெட்டி இல்லையென்றாலும்
வெட்டியாய் வேளை இல்லாதாக்கவும்
வேறிடம் தேவையில்லை
பணப்பை வெற்றிடம் ஆகும்வரை
களிப்பில் இல்லாவிட்டாலும் பணக்கழிப்பில்
நாம் இருப்போம், அதிர்ஷ்டம் தான் நம்பி
அறிவிழந்து நாம் இருப்போம்
அறிந்து கொண்டேன் இதை நான்
ஆயிரங்கள் பல இழந்து, வேறொன்றும்
அதிர்ஷ்டம் என்பது என் அகராதியில் இல்லையென்றும்...
காசு வேண்டாமென்றாலும்
வேண்டுமென்றாலும் ஏமாந்து போக
வேலை வெட்டி இல்லையென்றாலும்
வெட்டியாய் வேளை இல்லாதாக்கவும்
வேறிடம் தேவையில்லை
பணப்பை வெற்றிடம் ஆகும்வரை
களிப்பில் இல்லாவிட்டாலும் பணக்கழிப்பில்
நாம் இருப்போம், அதிர்ஷ்டம் தான் நம்பி
அறிவிழந்து நாம் இருப்போம்
அறிந்து கொண்டேன் இதை நான்
ஆயிரங்கள் பல இழந்து, வேறொன்றும்
அதிர்ஷ்டம் என்பது என் அகராதியில் இல்லையென்றும்...
செவ்வாய், 4 நவம்பர், 2008
தளிர் மங்கை
சில்லிடும் குளிர்காற்று
சிறகடிக்கும் சிட்டுக்குருவி
பனித்துளி பாரமுடன் பச்சைப்புல்வெளி
உறையத்துடிக்கும் சிறு ஓடை
ஓடத்துடிக்கும் துளி தண்ணீர்
தனித்து வந்த என்னோடு
தளிர் மங்கை இணைந்து கொண்டு
இன்பம் தந்தாள், இயற்கை அவள்...
சிறகடிக்கும் சிட்டுக்குருவி
பனித்துளி பாரமுடன் பச்சைப்புல்வெளி
உறையத்துடிக்கும் சிறு ஓடை
ஓடத்துடிக்கும் துளி தண்ணீர்
தனித்து வந்த என்னோடு
தளிர் மங்கை இணைந்து கொண்டு
இன்பம் தந்தாள், இயற்கை அவள்...
அம்மா உன்னோடு
சென்ற அன்னையர் தினம், சிறிதாய் ஒரு சுழல் காற்றையும் வீசி என்னை சிறிது கலங்கடித்தும் சென்றது. அன்னையர் தினம் இரவு வரை என் அம்மாவை அழைக்காததுதான் காரணம். அயல் நாட்டினர் அன்று தான் அம்மாவையும், ஒவ்வொரு நாள் வைத்து அன்று அப்பாவையும் மற்றவற்றையும் நினைக்கிறார்கள் நாம் அப்படியா? பிறகு என் அம்மாவின் செல்ல கோபம் போக்க பின் வரும் என் சின்ன கவிதையை அல்லது கவிதை என நான் நினைப்பதை இரவு 11. 30 pm போல் என் நண்பனிடம் கொடுத்தனுப்பி சமாதானம் செய்தேன்.
அன்னையர் தினம்,
அன்னை அவள் அருமை உணர்த்த!
அன்பெனும் அருமை நீ
அம்மா என்பதாலே
நின்னை நினைவில் நினைத்தாலே
உதடு மட்டுமல்ல, உயிரும் ஒட்டி
உன்னை உணர்வில் நிறைத்திடுமே
முன்னூறு நாளில் முளைத்த என்னை
பிள்ளையென பெற்றெடுத்து
பிறவி மீண்டும் நீ எடுத்தாய்
பிறந்தாய் என்னோடு
பிறவியெல்லாம் நான் உன்னோடு...
பிறந்தேனோ அறியவில்லை
நீ கெட்ட பிள்ளையென
காத்திருந்தாய் கண் என
கண் முன் இருந்தும் கடவுள் என...
அன்னையர் தினம்,
அன்னை அவள் அருமை உணர்த்த!
அன்பெனும் அருமை நீ
அம்மா என்பதாலே
நின்னை நினைவில் நினைத்தாலே
உதடு மட்டுமல்ல, உயிரும் ஒட்டி
உன்னை உணர்வில் நிறைத்திடுமே
முன்னூறு நாளில் முளைத்த என்னை
பிள்ளையென பெற்றெடுத்து
பிறவி மீண்டும் நீ எடுத்தாய்
பிறந்தாய் என்னோடு
பிறவியெல்லாம் நான் உன்னோடு...
பிறந்தேனோ அறியவில்லை
நீ கெட்ட பிள்ளையென
காத்திருந்தாய் கண் என
கண் முன் இருந்தும் கடவுள் என...
திங்கள், 3 நவம்பர், 2008
மழை நீர்
பருவ மழை வந்துவிட்டால்
என் பருவம் குறைந்து போகும்
பருமனும் சற்று கரைந்து போகும்
மழையோடு மனம் மகிழ்ந்திருக்கும்
கவலையெல்லாம் சற்று கவிழ்ந்திருக்கும்
தேவைக்கு வந்துவிட்டாள் தேவி அவள்
தேங்காமல் வந்துவிட்டாள் மூதேவி ஆவாள்
மழையோடு நனைய மறுத்தாலும்
யாரும் அணை கொண்டு
அவளை அணையை மறுத்ததில்லை
என் பருவம் குறைந்து போகும்
பருமனும் சற்று கரைந்து போகும்
மழையோடு மனம் மகிழ்ந்திருக்கும்
கவலையெல்லாம் சற்று கவிழ்ந்திருக்கும்
தேவைக்கு வந்துவிட்டாள் தேவி அவள்
தேங்காமல் வந்துவிட்டாள் மூதேவி ஆவாள்
மழையோடு நனைய மறுத்தாலும்
யாரும் அணை கொண்டு
அவளை அணையை மறுத்ததில்லை
வியாழன், 30 அக்டோபர், 2008
பகிர்ந்திட வந்தேன்
புதிதாய் சொல்ல ஏதுமில்லை
புத்தி சொல்ல போவதில்லை
வந்து போகும் தோணல்களை
தோரண தோற்றம் கொண்டு
தொந்தரவு செய்திடவே
உங்களுடன் பகிர்ந்திடுவேன்.
அறுசுவை படைப்பதில்லை
ஆனால் ஒரு சுவை உண்டாகும்
இனித்திருந்தாலும், புளித்திருந்தாலும்
இளித்திருக்க வைத்தாலும்
கசந்து நான் போக மாட்டேன்
உள்ள சுவை என்னவென்று
உண்மையாக நீங்கள் உரைத்திருந்தால்...
புத்தி சொல்ல போவதில்லை
வந்து போகும் தோணல்களை
தோரண தோற்றம் கொண்டு
தொந்தரவு செய்திடவே
உங்களுடன் பகிர்ந்திடுவேன்.
அறுசுவை படைப்பதில்லை
ஆனால் ஒரு சுவை உண்டாகும்
இனித்திருந்தாலும், புளித்திருந்தாலும்
இளித்திருக்க வைத்தாலும்
கசந்து நான் போக மாட்டேன்
உள்ள சுவை என்னவென்று
உண்மையாக நீங்கள் உரைத்திருந்தால்...
வியாழன், 16 அக்டோபர், 2008
அம்மா
வித்தென விழுந்த என்னை
முத்தென மூடி விளைவித்தாய்
கடல் கொண்ட சிப்பி நீ அல்ல
பனிக்குட போர்வையிலே
கருவறை கடல் நீ கொண்டாய்
உடல், உதிரம், உயிர்
உன்னால் நான் பெற்றேன்
உயிர் வாழ நான் உரு பெற
உதிரம் உட்புகுத்தி, ஊன் அளித்தாய்
சித்தம் முழுதும் எனைத்தாங்கி
பித்தம் பிற பிணியாவும் இன்றி
என்னுயிர் தான் காக்க
இன்னுயிர் நீ நொந்தாய்
அன்பெனும் அரண் கொண்டு
அல்லல் அனைத்தும் நீ களைந்தாய்
பிள்ளை நான் உனக்கு
பிறவி அது ஒழியும் வரை எனும்
பெரு வரம் தான் தருவாய்...
முத்தென மூடி விளைவித்தாய்
கடல் கொண்ட சிப்பி நீ அல்ல
பனிக்குட போர்வையிலே
கருவறை கடல் நீ கொண்டாய்
உடல், உதிரம், உயிர்
உன்னால் நான் பெற்றேன்
உயிர் வாழ நான் உரு பெற
உதிரம் உட்புகுத்தி, ஊன் அளித்தாய்
சித்தம் முழுதும் எனைத்தாங்கி
பித்தம் பிற பிணியாவும் இன்றி
என்னுயிர் தான் காக்க
இன்னுயிர் நீ நொந்தாய்
அன்பெனும் அரண் கொண்டு
அல்லல் அனைத்தும் நீ களைந்தாய்
பிள்ளை நான் உனக்கு
பிறவி அது ஒழியும் வரை எனும்
பெரு வரம் தான் தருவாய்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
