ஞாயிறு, 21 டிசம்பர், 2008

உயிரும் உணர்வும்

குளம் எழும் அலை எண்ணம்
அலை எழும் குளம் உணர்வு
அலையும் எண்ணம் அடங்கிப்போகும்
உணர்வு என்றும் ஒடுங்காது
உணர்வும் உயிரும் வெவ்வேறோ
எண்ணம் ஒன்று எழும்பி ஓட
உயிரும் உணர்வும் வேறென்றால்
நீயும் நானும் வேறு அன்றோ
உயிராய் உணர்வாய் விலகி நின்றேன்
உயிராய் என்னை உணரவில்லை
உணர்வாய் நானும் உயிர்க்கவில்லை
உயிரும் உணர்வும் ஒன்றாகி
உணர்ந்து கொண்டேன் ஒன்றென்றே
உயிரும் உணர்வும் அதுபோல
உன்னில் நானும்
என்னில் நீயும் ஒன்றானோம்
அடங்கும் அலை தான் போல
நம்மில் நாம் அடங்கி என்றும்
ஒடுங்கா உணர்வு குளம் ஆனோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª