செவ்வாய், 23 டிசம்பர், 2008

நினைவு

உடல் விட்டு வந்தாலும்
உயிர் விட்டு வரவில்லை
உனை விட்டு வந்தேன் என்றோ
நினை என்றே நித்தமும்
நிமிடமும் எனை வதைத்தாய்
நிழலின்றி இருந்தாலும் நின்
நினைவின்றி இருப்பதில்லை
நிம்மதி கொடுக்கும் தேவதை நீ
நித்தம் நான் தேடும் தேவையும் நீ
துடிக்க செய்வதும் துளிர்க்க செய்வதும்
உன் நினைவு, உயிர் பெற்றேன் உனக்காக
உத்தரவு தருவாயா எனதுயிரே
உயிரோடு உயிர் வாழ !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª