உன்னை பிரிந்து வந்தபின்னே
கடந்த நாட்கள் ஒன்றும் அதிகமில்லை
ஒவ்வொரு நாளும் ஒரு யுக நீளம்
மணி நேரம் அதிகமில்லை
காலம் நேரம் கடப்பதில்லை
கடிகாரமும் சுழல்வதில்லை
நிமிடம் கூட நீளமல்ல
நடக்கும் சக்தியற்று நட்டமாய் நிற்குதடி
நொடிக்கும் நேரம் தான் மறந்து
துடிக்கும் நொடி முள்ளும்
தொண்டை வரை குத்துதடி
குருதி தினம் குடிக்குதடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக