வியாழன், 30 அக்டோபர், 2008

பகிர்ந்திட வந்தேன்

புதிதாய் சொல்ல ஏதுமில்லை
புத்தி சொல்ல போவதில்லை
வந்து போகும் தோணல்களை
தோரண தோற்றம் கொண்டு
தொந்தரவு செய்திடவே
உங்களுடன் பகிர்ந்திடுவேன்.
அறுசுவை படைப்பதில்லை
ஆனால் ஒரு சுவை உண்டாகும்
இனித்திருந்தாலும், புளித்திருந்தாலும்
இளித்திருக்க வைத்தாலும்
கசந்து நான் போக மாட்டேன்
உள்ள சுவை என்னவென்று
உண்மையாக நீங்கள் உரைத்திருந்தால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª