
சூம்பிய கால்களும்
ஏங்கிய கண்களும்
வலுவில்லா தேகத்தை
பளு தூக்கும் வலி கொண்டு
வயிற்றின் வலி போக்க
வாழ்வின் வழி தேட
கட்டைப்பலகை மேல் கை கொண்டு
வழியெங்கும் வந்து போகையிலும்
புரியாத புன்னகை !
புரிகின்றானோ ஆண்டவன் ???
இறைந்திருக்கும் குப்பையில்
கடந்தவர் கருணையும், கண்ணீரும்
கலந்திருக்கும் காரணத்தினாலோ ???
கடந்தவர் எல்லாம்
கல் நெஞ்சரும் இல்லை
காசிட்டவர் எல்லாம்
கருணை நிறைந்தவரும் இல்லை
என்னும் கர்மம் அறிந்ததாலோ???
கடவுளுக்கும் காரணக்காரனுக்குமே வெளிச்சம்...
