புதன், 12 செப்டம்பர், 2012

வரம் வேண்டும்...

காலையில்  எழுந்து சரிவர கடனும் ஆற்றாது

கைதொழும் கடமையும் ஆற்றாது

களைப்பும் கவலையும் கண்ணைவிட்டுப் போகாது

பணிவுடன் பணி விரும்பாது பழித்துச் சென்று

பற்றும் அறிவு பற்றாது, பாவம் தொற்றும்

பலவற்றிலும்  பயனற்று போனேன்

பசிக்கையில் உணவு, பார்வையில் பரிவு

வேண்டும் போது உறக்கம், விரும்பும் போது விழிப்பு

வேட்கையில் உறவு, வேண்டுமதில், உன்னத உணர்வு

உள்ளும்  புறமும்  ஒளி சூழ

காதலும் கருணையும் கண்ணில் பொங்க

மண்ணில் மனிதனாய் வாழ வரம் வேண்டும்...

இறைவா நீ என்னுள்  வா  வா ....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ª